வால்பாறையில் சிறுத்தைப்புலி தாக்கி காளை மாடு பலி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற காளை மாட்டை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, ஜனவரி 11

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற காளை மாட்டை சிறுத்தை கடித்துக் கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



வால்பாறை காமராஜ்நகர் பகுதியில் வசித்து வருபவர் அன்பழகன். இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் மேய்ச்சலுக்குச் சென்ற காளை மாடு, மாலை நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அன்பழகன் பல இடங்களில் தனது காளை மாட்டைத் தேடியுள்ளார். அப்போது, சவரங்காடு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தனது 2 வயதுள்ள காளை மாடு சிறுத்தைப்புலி தாக்கி இறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், வால்பாறை வனச்சரகர் சக்திவேல் சம்பவ இடத்திற்கு வந்தார். தொடர்ந்து காளை மாடு இறந்தது குறித்து விசாரணை மேற்கொண்டார். 

சமீபகாலமாக, வால்பாறைநகர் பகுதி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, வனத்துறையினர் உடனடியாக கூண்டு வைத்து அதனைப் பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...