விசாரணை ஆணையம் முன்பு மீண்டும் ஆஜரானார் ஷீலா பாலகிருஷ்ணன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜரானார்.

ஜனவரி 11

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் இன்று மீண்டும் ஆஜரானார். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

இதில், சசிகலா உறவினர் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, மகன் தீபக், அரசு மருத்துவர்கள், தி.மு.க. பிரமுகர் டாக்டர் சரவணன், தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவ், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் உள்பட பலர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

முன்னாள் தலைமை செயலாளராகவும், அரசு ஆலோசகராகவும் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஏற்கனவே, கடந்த 20-ம் தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்து இருந்தார். இந்த நிலையில் ஷீலா பாலகிருஷ்ணனை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து இன்று காலை ஷீலா பாலகிருஷ்ணன் சேப்பாக்கத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

அப்போது, ஷீலா பாலகிருஷ்ணனிடம் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் மேலும் சில தகவல்களை நீதிபதி ஆறுமுகசாமி விசாரித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அவரிடம் விசாரிக்கப்பட்டது. 

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது, ஜெயலலிதாவை நேரில் பார்த்ததாக சாட்சியம் அளித்த 4 பேரில் ஷீலா பாலகிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...