விளம்பர சுவர்களாக மாறி வரும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் சுவர்களில் பல்வேறு தரப்பினரும் விளம்பர போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.


கோவை, ஜனவரி 11

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் சுவர்களில் பல்வேறு தரப்பினரும் விளம்பர போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சுற்றுப்புறத்தையும் வீட்டையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தும் மாவட்ட நிர்வாகம் தனக்கான கட்டிடத்தைத் தூய்மையாக வைக்கவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.



இது குறித்து சமூக ஆர்வலர் மனோஜ் கூறுகையில், "அரசு சுவர் மற்றும் பொது இடங்களில் போஸ்டர் ஒட்டும் கலாச்சாரம் தற்போது பெருகிவருகிறது. இதனைத் தடுக்க கோவை மாநகராட்சி சில வருடங்களுக்கு முன்பு அரசு சுவர்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போஸ்டர் ஒட்டும் கலாச்சாரத்தை முதலில் சங்கங்கள் ஆரம்பித்தன. அதன் பின் தற்போது பல்வேறு தரப்பினரும் இதனைப் பின் தொடர்ந்து வருகின்றனர். இது போன்ற போஸ்டர் ஒட்டுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.



பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் அவர்களை ஈர்க்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்படுக்கின்றன. இதனால் கட்டிடத்தின் அழகு சீர்குலைந்து முகம் சுலிக்க வைக்கிறது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...