சென்னை கால்பந்து கழகம்- நெரோகோ இடையேயான போட்டி டிராவில் நிறைவு

கோவை, ஜனவரி 10

கோவை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை கால்பந்து கழகம்- நெரோகோ அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.

ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டிகள் கடந்த 2017 நவம்பர் 25 ம் தேதியன்று துவங்கி வரும் 2018 மார்ச் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கிழக்கு வங்க கிங்பிஷர் அணி, மினர்வா பஞ்சாப் கால்பந்து கழகம், நெரோகோ கால்பந்து கழகம், ஷிலாங் லஜோங் கழக அணி, மோகன் பகன், ஆஸ்வால் கால்பந்து கழக அணி, சென்னை நகர கால்பந்து அணி, இந்தியன் ஏரோஸ், கோகுலம் கேரள கால்பந்து கழகம் மற்றும் கோவாவைச் சேர்ந்த சர்ச்சில் பிரதர்ஸ் அணி என இந்தியாவின் தலை சிறந்த 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

நேற்று (ஜன. 9) கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை கால்பந்து கழக அணியின் 9-வது போட்டியில் நெரோகோ அணியை எதிர்த்து விளையாடியது. துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோசத்துடன் விளையாடினர்.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கு தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சிறப்பான முறையில் பயன்படுத்தினர். தொடர்ந்து, இரண்டாவது பாதி ஆட்டத்திலும் அனல் பறக்கும் ஆட்டத்தை இரு அணி வீரர்களும் வெளிப்படுத்தினர்.

கோல் அடிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருந்தும் இரு அணியின் கோல் கீப்பர்கள் சிறப்பாக செயல்பட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சென்னை அணியின் கேப்டன் சூசைராஜா-விற்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் காசோலையினை வழங்கி கவுரவித்தனர். இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

இந்தத் தொடர் முழுக்க சென்னை அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் கோவையிலேயே நடைபெறவுள்ளது. சென்னை கால்பந்தாட்ட கழக அணி தற்போது வரை 9 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 சமன், 4 தோல்வி என 9 புள்ளிகளுடன் உள்ளது. வரும் 20ம் தேதியன்று சென்னை அணிக்கும், கால்பந்தாட்டத்தில் புகழ்பெற்ற கேரள அணிக்கும் இடையே போட்டி நடைபெறவுள்ளதால் வழக்கத்தைவிட அன்று பார்வையாளர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...