சென்னை கால்பந்து கழகம்- நெரோகோ இடையேயான போட்டி டிராவில் நிறைவு

கோவை, ஜனவரி 10

கோவை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை கால்பந்து கழகம்- நெரோகோ அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிந்தது.

ஹீரோ ஐ லீக் கால்பந்து போட்டிகள் கடந்த 2017 நவம்பர் 25 ம் தேதியன்று துவங்கி வரும் 2018 மார்ச் 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் கிழக்கு வங்க கிங்பிஷர் அணி, மினர்வா பஞ்சாப் கால்பந்து கழகம், நெரோகோ கால்பந்து கழகம், ஷிலாங் லஜோங் கழக அணி, மோகன் பகன், ஆஸ்வால் கால்பந்து கழக அணி, சென்னை நகர கால்பந்து அணி, இந்தியன் ஏரோஸ், கோகுலம் கேரள கால்பந்து கழகம் மற்றும் கோவாவைச் சேர்ந்த சர்ச்சில் பிரதர்ஸ் அணி என இந்தியாவின் தலை சிறந்த 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் 18 போட்டிகளில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

நேற்று (ஜன. 9) கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சென்னை கால்பந்து கழக அணியின் 9-வது போட்டியில் நெரோகோ அணியை எதிர்த்து விளையாடியது. துவக்கம் முதலே இரு அணி வீரர்களும் ஆக்ரோசத்துடன் விளையாடினர்.

முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கு தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை சிறப்பான முறையில் பயன்படுத்தினர். தொடர்ந்து, இரண்டாவது பாதி ஆட்டத்திலும் அனல் பறக்கும் ஆட்டத்தை இரு அணி வீரர்களும் வெளிப்படுத்தினர்.

கோல் அடிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருந்தும் இரு அணியின் கோல் கீப்பர்கள் சிறப்பாக செயல்பட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சென்னை அணியின் கேப்டன் சூசைராஜா-விற்கு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பெரியய்யா ஆகியோர் காசோலையினை வழங்கி கவுரவித்தனர். இதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

இந்தத் தொடர் முழுக்க சென்னை அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் கோவையிலேயே நடைபெறவுள்ளது. சென்னை கால்பந்தாட்ட கழக அணி தற்போது வரை 9 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 சமன், 4 தோல்வி என 9 புள்ளிகளுடன் உள்ளது. வரும் 20ம் தேதியன்று சென்னை அணிக்கும், கால்பந்தாட்டத்தில் புகழ்பெற்ற கேரள அணிக்கும் இடையே போட்டி நடைபெறவுள்ளதால் வழக்கத்தைவிட அன்று பார்வையாளர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...