2-ம் நிலைக் காவலராக பணிபுரிவதற்கு விண்ணப்பிக்க 27-ம் தேதி கடைசி நாள்

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலைக் காவலராக பணிபுரிவதற்கு விண்ணிப்பிக்க வரும் வரும் 27-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 09

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலைக் காவலராக பணிபுரிவதற்கு விண்ணிப்பிக்க வரும் வரும் 27-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலம் முழுவதும் உள்ள 6,094 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் 5 சதவீதம் இடங்கள் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தமிழ்ந்டு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தினால் நடத்தப்படும் இத்தேர்வுக்கு ஜனவரி 27-ம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான விவரங்கள் www.tnusrb.tn.gov.in  என்ற இணையதளத்தில் காணலாம். 

எனவே, சீருடைப் பணியாளர் தேர்விற்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணையதள வழியாக விண்ணப்பித்து அவ்விண்ணப்பத்தின் நகலுடன் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறும், இதுதொடர்பாக மேலும் விபரம்பெற மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...