2-ம் நிலைக் காவலராக பணிபுரிவதற்கு விண்ணப்பிக்க 27-ம் தேதி கடைசி நாள்

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலைக் காவலராக பணிபுரிவதற்கு விண்ணிப்பிக்க வரும் வரும் 27-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 09

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 2-ம் நிலைக் காவலராக பணிபுரிவதற்கு விண்ணிப்பிக்க வரும் வரும் 27-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாநிலம் முழுவதும் உள்ள 6,094 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் 5 சதவீதம் இடங்கள் முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தமிழ்ந்டு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தினால் நடத்தப்படும் இத்தேர்வுக்கு ஜனவரி 27-ம் தேதி வரை விண்ணப்பிப்பதற்கான விவரங்கள் www.tnusrb.tn.gov.in  என்ற இணையதளத்தில் காணலாம். 

எனவே, சீருடைப் பணியாளர் தேர்விற்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், இணையதள வழியாக விண்ணப்பித்து அவ்விண்ணப்பத்தின் நகலுடன் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நலஉதவி இயக்குநர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்குமாறும், இதுதொடர்பாக மேலும் விபரம்பெற மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...