பாசனதிட்டப்பணிகளை இணையதளத்தில் பதிவு செய்யத் தற்காலிக பதிவாளர்களுக்கான பணிநியமன முகமை

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசனதிட்டப் பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்யத் தகுதி வாய்ந்த கணினி புள்ளிவிவரப் பதிவாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், பணிநியமன முகமை மூலம் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 9

கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நுண்ணீர் பாசனதிட்டப் பணிகளை இணையதளம் மூலம் பதிவு செய்யத் தகுதி வாய்ந்த கணினி புள்ளிவிவரப் பதிவாளர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், பணிநியமன முகமை மூலம் நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய உள்ள பணியாளர்கள், இளங்கலைபட்டப்படிப்பு, கணினி இயக்குத்திறன், தட்டச்சுதிறனில் தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு, மாதாந்திர தொகுப்பூதியமாக ரூ.10,000 வழங்கப்படும்.

இப்பணியை மேற்கொள்ளத் தகுதி வாய்ந்த பதிவுத்துறையின் மூலம் பதிவு செய்து செயல்பட்டு வரும் பணிநியமன முகமைகள் பணியாளர்களை தேர்வு செய்து வழங்க தங்களது பணி நியமன முகமையின் விவரங்கள், அனுபவம் மற்றும் ஒப்பந்த பணியாளர்களை வழங்கச் சேவைக்கட்டணம் ஆகியவற்றைத் தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், கோவை என்ற முகவரிக்கு வரும்படி, ஜனவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வாகும் பணிநியமன முகமை உடனடியாக ஒப்பந்தப் பணியாளர்களை தேர்வு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...