பள்ளி ஆசிரியர்களுக்கு இந்திய கணக்காளர் கல்வி குழுமம் சார்பில் ”சிம்ஏ” படிப்புக்கான பயிற்சி

கோவை, ஜனவரி 06

இந்திய கணக்காளர் கல்வி குழுமம் கோவை பதிப்பகம் சார்பில் பள்ளி ஆசிரியர்களுக்கான ” சிம்ஏ” படிப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டது. 

”சிம்ஏ” படிப்புகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதன்மை கல்வி அதிகாரியின் உதவியுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பயிற்சி பெறும் ஆசிரியர்கள், ப்ளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு நிறைவு செய்யும் மாணவர்களுக்கு, எதிர்காலத்தில் எந்தத் துறையை தேர்வு செய்வது என்பது குறித்து சரியான வழிகாட்ட உதவியாக இருக்கும். 

இந்திய கணக்காளர் கல்வி குழுமம், நாடு முழுவதும் நான்கு பிராந்தியங்களில் தங்களது கிளைகளை நிறுவியுள்ளது. சென்னை, கொல்கத்தா, மும்பை, தில்லி போன்ற பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்தக் கணக்காளர் படிப்பை தேர்வு செய்து உறுப்பினர்களாக இருப்பவர்கள், படித்துக் கொண்டே பணிபுரிகின்றனர். குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள தொழில்நிறுவனங்களின் வர்த்தக விபரத்தைக் கணக்கிடுகின்றனர். 

இந்தக் கல்வி நிறுவனமானது, நாட்டை வளப்படுத்தும் மத்திய அரசின் திட்டங்களான ஸ்வச் பாரத் அபியான், ஒரே தேசம் ஒரே வரி (ஜிஎஸ்டி) போன்ற திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. குறிப்பாக, கடந்த ஜுலை 1-ம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டபோது, மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது குறித்த ஆலோசனைகளையும், பங்களிப்பையும் வழங்கியது. 

தரமான கணக்காளர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மேலும், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகளின் அனுமதியுடன், மாவட்டந்தோறும், இந்திய கணக்காளர் கல்வி குழுமத்தின் பயிற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. இதில், பயிற்சி பெற்றவர்கள் இந்தியாவில் உள்ள ஐஐஎம் போன்ற முதன்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். 

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...