கோவை, ஜனவரி 05
பொங்கல் பண்டிகைக்கு பிறகு கோவையில் செயல்பட்டு வரும் மத்திய சுங்கத்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக கோவை சுங்கம் மற்றும் கலால் வரித்துறை ஆணையர் சீனிவாசராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் செயல்பட்டு வரும் சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம் செய்வது குறித்த முடிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே முடிவு செய்யப்பட்டது. பல்வேறு காரணங்கள் இடமாற்றம் செய்வது தாமதமாகியுள்ளது. என்றார்.
இதனிடையே ஆனால், கோவை விமான நிலையத்தின் மூலம் அதிகமான சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுவதால், உற்பத்தி நிறுவனங்கள் மத்திய சுங்கத்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம் செய்வதை திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தினர்.
ஆனால், உற்பத்தி நிறுவனங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. அதேவேளையில், பணியாளர் குறைவு காரணமாக சுங்கத்துறை அலுவலகம் கோவையில் டிசம்பர் 31-ம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. கோவையில் தற்போது செயல்பட்டு வரும் அலுவலகத்தில், 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், வெளி அலுவலகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், திருச்சிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
கோவை மத்திய சுங்கத்துறை அலுவலகமானது, கோவை மற்றும் திருப்பூரைச் சேர்ந்த 4 கண்டெய்னர் வைப்புகளைக் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு கோவையில் செயல்பட்டு வரும் மத்திய சுங்கத்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக கோவை சுங்கம் மற்றும் கலால் வரித்துறை ஆணையர் சீனிவாசராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவையில் செயல்பட்டு வரும் சுங்கம் மற்றும் கலால் வரித்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம் செய்வது குறித்த முடிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதமே முடிவு செய்யப்பட்டது. பல்வேறு காரணங்கள் இடமாற்றம் செய்வது தாமதமாகியுள்ளது. என்றார்.
இதனிடையே ஆனால், கோவை விமான நிலையத்தின் மூலம் அதிகமான சரக்குகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படுவதால், உற்பத்தி நிறுவனங்கள் மத்திய சுங்கத்துறை அலுவலகம் திருச்சிக்கு இடமாற்றம் செய்வதை திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்தினர்.
ஆனால், உற்பத்தி நிறுவனங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. அதேவேளையில், பணியாளர் குறைவு காரணமாக சுங்கத்துறை அலுவலகம் கோவையில் டிசம்பர் 31-ம் தேதி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டது. கோவையில் தற்போது செயல்பட்டு வரும் அலுவலகத்தில், 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், வெளி அலுவலகப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், திருச்சிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளனர்.
கோவை மத்திய சுங்கத்துறை அலுவலகமானது, கோவை மற்றும் திருப்பூரைச் சேர்ந்த 4 கண்டெய்னர் வைப்புகளைக் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.