ரஜினியின் புதிய கட்சிக்கு அதிமுக அமைச்சர் வரவேற்பு!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவதை வரவேற்பதாகவும், இருப்பினும் கட்சியின் கொள்கைகளை அறிவித்த பின்னரே அது குறித்து கருத்து கூற முடியும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 03:

நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவதை வரவேற்பதாகவும், இருப்பினும் கட்சியின் கொள்கைகளை அறிவித்த பின்னரே அது குறித்து கருத்து கூற முடியும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாய பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, புயல் என அனைத்தையும் இந்த அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது. 

இன்று நடைபெற்ற எம்எல்ஏ கூட்டம் வழக்கமான கூட்டம்தான். சட்டமன்றத்தில் எம்எல்ஏ-க்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் சட்டமன்றத்திற்கு வந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படவில்லை.

நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முடிவிற்கு வரவேற்பு தெரிவித்துக்கொள்கிறேன். அவரது கட்சி கொள்ளைகளை அறிவித்த பின்பே கருத்து கூற முடியும்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் போன்ற திட்டங்களில் சில முரண்பாடுகள் இருக்கின்றது. அனைத்து மாநிலங்களிலும் இந்த நிலை உள்ளது. அம்ரூத் திட்டத்தினை செயல்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஆரம்ப கால பணிகள் நடைபெற்று வருகின்றது. ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து நீண்டகால திட்டமாக செயல்படுத்தப்பட இருக்கின்றது. மேலும், மெட்ரோ ரயில் திட்டமும், அவினாசி சாலை பாலம் திட்டமும் ஒன்றுக்கு ஒன்று இடையூறு இல்லாத வகையில் செயல்படுத்தப்படும். ஆர்.கே.நகரில் குடிநீரில் கழிவுகள் கலந்து வருவதாக டிடிவி தினகரன் புகார் தெரிவித்ததாகத் தகவல் எதுவும் இல்லை. புகார்கள் வந்தால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...