ரஜினியின் புதிய கட்சிக்கு அதிமுக அமைச்சர் வரவேற்பு!

நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவதை வரவேற்பதாகவும், இருப்பினும் கட்சியின் கொள்கைகளை அறிவித்த பின்னரே அது குறித்து கருத்து கூற முடியும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை, ஜனவரி 03:

நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவதை வரவேற்பதாகவும், இருப்பினும் கட்சியின் கொள்கைகளை அறிவித்த பின்னரே அது குறித்து கருத்து கூற முடியும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாய பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, புயல் என அனைத்தையும் இந்த அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது. 

இன்று நடைபெற்ற எம்எல்ஏ கூட்டம் வழக்கமான கூட்டம்தான். சட்டமன்றத்தில் எம்எல்ஏ-க்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் சட்டமன்றத்திற்கு வந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படவில்லை.

நடிகர் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் முடிவிற்கு வரவேற்பு தெரிவித்துக்கொள்கிறேன். அவரது கட்சி கொள்ளைகளை அறிவித்த பின்பே கருத்து கூற முடியும்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் போன்ற திட்டங்களில் சில முரண்பாடுகள் இருக்கின்றது. அனைத்து மாநிலங்களிலும் இந்த நிலை உள்ளது. அம்ரூத் திட்டத்தினை செயல்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஆரம்ப கால பணிகள் நடைபெற்று வருகின்றது. ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து நீண்டகால திட்டமாக செயல்படுத்தப்பட இருக்கின்றது. மேலும், மெட்ரோ ரயில் திட்டமும், அவினாசி சாலை பாலம் திட்டமும் ஒன்றுக்கு ஒன்று இடையூறு இல்லாத வகையில் செயல்படுத்தப்படும். ஆர்.கே.நகரில் குடிநீரில் கழிவுகள் கலந்து வருவதாக டிடிவி தினகரன் புகார் தெரிவித்ததாகத் தகவல் எதுவும் இல்லை. புகார்கள் வந்தால் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...