அரசியலில் களம்புகும் ரஜினியை யாரும் இயக்கவில்லை' - ஜி.கே. வாசன்

நடிகர் ரஜினியை யாரோ இயக்குவது என்பது தவறான கருத்து, அவருடைய திரைப்படங்களில் இயக்குநர்கள் மட்டுமே அவரை இயக்க முடியுமே தவிர அரசியலில் யாரும் அவரை இயக்க முடியாது என்று திருப்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திருப்பூர், ஜனவரி 03:

நடிகர் ரஜினியை யாரோ இயக்குவது என்பது தவறான கருத்து, அவருடைய திரைப்படங்களில் இயக்குநர்கள் மட்டுமே அவரை இயக்க முடியுமே தவிர அரசியலில் யாரும் அவரை இயக்க முடியாது என்று திருப்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகரில் த.மா.க.,வின் மாணவரணி செயலாளர் பிரசாந்த் உள்ளிட்ட மூன்று பேர் கடந்த 2017 டிசம்பர் 31-ஆம் தேதியன்று கோவை மாவட்டம் சூலூர் காவல் சரகத்திற்குட்பட்ட தெண்ணம்பாளையம் அருகே சாலை விபத்தில் பலியாயினர். அவர்களது இல்லத்திற்கு இன்று சென்ற ஜி.கே.வாசன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 

இதனையடுத்து கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் பேட்டியளிக்கையில், "ரஜினிகாந்த் அரசியலுக்கு புதியவர் அல்ல. 30 வருடங்களாக நேரிடையாகவும், மறைமுகமாகவும் அரசியலை கவனித்து வருகிறார். அரசியல் ஆழம் தெரிந்தவர். பல தலைவர்களும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவரைச் சந்தித்து ஆலோசனை செய்ததுண்டு.

ரஜினியின் முழுநேர அரசியலுக்காக பொறுத்திருக்கிறோம். அவரின் கொள்கை, கோட்பாடுகளை பொறுத்து த.மா.க கூட்டணி முடிவு செய்யும்" என்றார்.

மேலும், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். ஜிஎஸ்டி வரிவிதிப்பின் காரணமாக திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அதனை முறைப்படுத்தப்பட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் வார்டுகள் பிரிக்கப்படும் போது ஆய்வு, ஆலோசனை, மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக அமைய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...