ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விசாரணை ஆணையத்தில் ஒப்படைப்பு

ஜனவரி 3

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான முழு வீடியோ ஆதாரங்களை டிடிவி. தினகரன் விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசால் விசாரணை ஆணையம்அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 20ம் தேதி டிடிவி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா டிவி பார்த்துக்கொண்டே பழச்சாறு குடிப்பது போன்ற 20 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவை ஒப்படைக்குமாறு விசாரணை ஆணையத்தில் இருந்து வெற்றிவேலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 25ம் தேதி வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர்கள் வீடியோவை ஒப்படைத்தனர். 

இதனிடையே, கடந்த 22ம் தேதி, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆதாரங்கள் இருந்தால் ஒப்படைக்குமாறு சசிகலா, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, அவர் மகள் பிரீத்தா ரெட்டிக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. அதேபோன்று, கடந்த 26ம் தேதி ஜெயலலிதா வீடியோ ஆதாரங்கள் இருந்தால் 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு டிடிவி.தினகரனுக்கு சம்மன் அனுப்பியது. அவருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஜெயலலிதா குறித்த வீடியோ ஆதாரங்களை பென் டிரைவில் பதிவு செய்து நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஒப்படைத்தார். 

பின்னர் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி நிருபர்களிடம் கூறியதாவது: ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இருந்து கடந்த 28ம் தேதி டிடிவி.தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஜெயலலிதா குறித்த வீடியோ ஆதாரங்கள் இருந்தால் 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நேரில் ஆஜராகி பென் டிரைவ் ஒன்றை நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளேன். அந்த பென் டிரைவில் உள்ள வீடியோவை நீதிபதி பார்த்தார். அதில் இருக்கிற பதிவுகளை அவர் குறிப்பு எடுத்துக்கொண்டார். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் உயிரோடு இருந்தார். 

அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார் என்பதை வெளிப்படுத்தக் கூடிய வீடியோ பதிவு இருந்ததை தாக்கல் செய்துள்ளோம். வெற்றிவேல் தாக்கல் செய்த வீடியோவை தவிர மற்ற வீடியோக்களை ஒப்படைத்து இருக்கிறோம். என்றார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...