ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விசாரணை ஆணையத்தில் ஒப்படைப்பு

ஜனவரி 3

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான முழு வீடியோ ஆதாரங்களை டிடிவி. தினகரன் விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசால் விசாரணை ஆணையம்அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 20ம் தேதி டிடிவி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா டிவி பார்த்துக்கொண்டே பழச்சாறு குடிப்பது போன்ற 20 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவை ஒப்படைக்குமாறு விசாரணை ஆணையத்தில் இருந்து வெற்றிவேலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த 25ம் தேதி வெற்றிவேல் தரப்பு வழக்கறிஞர்கள் வீடியோவை ஒப்படைத்தனர். 

இதனிடையே, கடந்த 22ம் தேதி, ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆதாரங்கள் இருந்தால் ஒப்படைக்குமாறு சசிகலா, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, அவர் மகள் பிரீத்தா ரெட்டிக்கு ஆணையம் சம்மன் அனுப்பியது. அதேபோன்று, கடந்த 26ம் தேதி ஜெயலலிதா வீடியோ ஆதாரங்கள் இருந்தால் 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு டிடிவி.தினகரனுக்கு சம்மன் அனுப்பியது. அவருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஜெயலலிதா குறித்த வீடியோ ஆதாரங்களை பென் டிரைவில் பதிவு செய்து நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஒப்படைத்தார். 

பின்னர் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி நிருபர்களிடம் கூறியதாவது: ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இருந்து கடந்த 28ம் தேதி டிடிவி.தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஜெயலலிதா குறித்த வீடியோ ஆதாரங்கள் இருந்தால் 7 நாட்களுக்குள் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நேரில் ஆஜராகி பென் டிரைவ் ஒன்றை நீதிபதியிடம் ஒப்படைத்துள்ளேன். அந்த பென் டிரைவில் உள்ள வீடியோவை நீதிபதி பார்த்தார். அதில் இருக்கிற பதிவுகளை அவர் குறிப்பு எடுத்துக்கொண்டார். ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் உயிரோடு இருந்தார். 

அவர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார் என்பதை வெளிப்படுத்தக் கூடிய வீடியோ பதிவு இருந்ததை தாக்கல் செய்துள்ளோம். வெற்றிவேல் தாக்கல் செய்த வீடியோவை தவிர மற்ற வீடியோக்களை ஒப்படைத்து இருக்கிறோம். என்றார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...