இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு : அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து ஆர்ப்பாட்டம்

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, ஜனவரி 2

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து விட்டு, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது தொடர்பான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. இதற்கு, நாடு முழுவதும் மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளில் வெளிநோயாளிகளுக்கான சிகிச்சையானது காலை 6 மணி முதல் மாலை 6 மணி அவசர சிகிச்சைகள் தவிர மற்ற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் இன்று 5,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்த அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாக இந்திய மருத்துவ சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர். ரவிக்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையினை கண்டித்து கோவை அரசு மருத்துவமனையில் இன்று காலை அரசு மருத்துவர்கள் ஒரு மணிநேர பணிப் புறக்கணிப்பு செய்தனர். மேலும், கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறுகையில், "இந்திய மருத்துவ கவுன்சில் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருந்த நிலையில், அதனைக் கலைத்து விட்டு தேசிய மருத்துவ ஆணையம் அமைத்து அதை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், ஆயுஷ் மருத்துவர்கள் 6 மாதம் பயிற்சி எடுத்தால், அலோபதி மருத்துவம் பார்க்கலாம் என புதிய மசோதாவில் உள்ளது. இது போலி மருத்துவர்களை உருவாக்கும். தேசிய மருத்துவ ஆணையத்தில் மாநில அரசுகளுக்கு எந்த உரிமையும் கொடுக்கப்படவில்லை. இது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் இந்திய மருத்துவ கவுன்சிலை கலைக்கும் நடவடிக்கையினை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டங்கள் நடத்துவோம்" என்றனர். 

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...