வனப்பகுதி மலைவாழ் கிராமங்களில் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

கோவை, டிசம்பர் 27

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுவன மேலாண்மை குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வனஅலுவலர் ந.சதீஸ் மாவட்ட கூட்டுவன மேலாண்மைகுழு உறுப்பினர்கள், அனைத்து திட்ட கிராம வனக்குழு உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் வனப்பகுதி மலைவாழ் கிராமங்களில், ஆட்சியர் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, மாவட்ட அளவிலான கூட்டுவன மேலாண்மை குழுவின் மூலம் வனப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தல், பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காரமடை பகுதிகளில் உள்ள வனகிராமங்களான சேத்துமடை, பூச்சிமரத்தூர், நெல்லிமரத்தூர், இருளர்பதி, பாறையன்கோம்பை உள்ளிட்ட கிராமங்களில் 63 பயனாளிகளுக்கு கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது. நம்பர் 4 வீரப்பாண்டி பகுதிக்கு அருகாமையில் பூலப்பதி கிராமத்தில் ரூ. 9.19 லட்சம் மதிப்பில் சூரியஒளியில் இயங்கும் மோட்டார் வசதி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.  

தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ்கள் உரிய விசாரணையின் பேரில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. வெள்ளருக்கம்பாளையம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேரண், கிணறு கிராமத்தில் 400 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், புதிய நியாயவிலைக் கடை அமைக்க துரித நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்துப்பட்டுள்ளது. தேக்கம்பட்டியில் ரூ. 7.20 லட்சம் மதிப்பில் 20 சோலார் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் நெல்லிமலையில் இருந்து வரும் உபரிநீரை தடுப்பணைகட்டி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.    

தொடர்ந்து, மலைவாழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படாத வகையில், அகழிகள் ஏற்படுத்துதல் தொலைதூர வெளிச்சம் தரக்கூடிய டார்ச்லைட்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மலைவாழ் மக்கள் சுயசார்பு அடையும் வகையில், சிறுவன சாகுபடி மேற்கொள்ளவும், தங்களால் உற்பத்திசெய்யக்கூடிய கைவினைப் பொருட்களை சந்தைபடுத்தவும் வனஅலுவலர்கள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இக்கூட்டத்தில், மாவட்ட கூட்டுவன மேலாண்மைகுழுவினரால் வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்து உரியப் பரிசீலனைகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...