தமிழகத்திற்கு ரூ.133 கோடி ஒகி புயல் பாதிப்புகளுக்கான இடைக்கால நிவாரண நிதி ஒதுக்கீடு

டிசம்பர் 28

ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களை சரி செய்வதற்காக தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.133 கோடியை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

கடந்த நவம்பர் மாதம் ஒகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கிய போது, கடலுக்குச் சென்ற மீனவர்கள் காணாமல் போகினர். புயல் மழை காரணமாக பல ஏக்கர் பயிர்கள் நாசமானது. மரங்கள் முறிந்து விழுந்தன. ரப்பர், தேக்கு, தென்னை என பலவகை மரங்கள் முறிந்து விழுந்தன. அதனால், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகள் சேதமடைந்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரிகள் குமரியில் முகாமிட்டு புயலால் பாதிக்கப்பட்ட சேதங்களை மதிப்பிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். 

இதனிடையே, ஒகி புயல் பாதிப்பை, இயற்கைப் பேரிடராக அறிவித்து, உரிய நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், ஒகி புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களை சரி செய்வதற்காக தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.133 கோடியை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்தத் தொகை வழங்கப்பட உள்ளது.

மத்திய குழு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில், சேத மதிப்பீட்டின் அடிப்படையில் கூடுதலாக நிதி ஒதுக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் பாதிப்புக்களை மத்தியக் குழு நாளை ஆய்வு செய்ய உள்ள நிலையில், மத்திய அரசு இன்று இடைக்கால நிவாரண நிதியை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...