கோவை, டிசம்பர் 27
திருப்பூர் அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.
கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (57). இவர் ரத்திஸ் (36) மற்றும் ரூபேஸ் (34) என்ற இருமகன்களின் குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் இருந்து கார் மூலமாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இதே போல் கோவியில் இருந்து கரூர் சாலையை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை சபாபதி (48) என்பவர் இயக்கிவந்தார்.
அந்த கார் வெள்ள கோவிலை அடுத்த ஓலப்பாளையம் என்ற பகுதி அருகே சென்ற போது நிலை தடுமாறி எதிரே வந்த லார் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த லட்சுமி (57), ரத்தீஸ் (36) சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சபாபதி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவலறிந்த ஓலப்பாளையம் போலீசார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரூபேஸ் (34) அவரது மனைவி சுமதி (32), குழந்தைகள் தீப்ஷிதா (7), லட்சுமி (2), அபிதேஷ் (7), திரோஷ் (5), மற்றும் ரத்தீஸ்-ன் மனைவி வீணா (30) ஆகிய 7 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரூபேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது படுகாயமடைந்த 6 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர் அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகியுள்ளனர்.
கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (57). இவர் ரத்திஸ் (36) மற்றும் ரூபேஸ் (34) என்ற இருமகன்களின் குடும்பத்தினருடன் தஞ்சாவூரில் இருந்து கார் மூலமாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இதே போல் கோவியில் இருந்து கரூர் சாலையை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை சபாபதி (48) என்பவர் இயக்கிவந்தார்.
அந்த கார் வெள்ள கோவிலை அடுத்த ஓலப்பாளையம் என்ற பகுதி அருகே சென்ற போது நிலை தடுமாறி எதிரே வந்த லார் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த லட்சுமி (57), ரத்தீஸ் (36) சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சபாபதி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது குறித்து தகவலறிந்த ஓலப்பாளையம் போலீசார் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரூபேஸ் (34) அவரது மனைவி சுமதி (32), குழந்தைகள் தீப்ஷிதா (7), லட்சுமி (2), அபிதேஷ் (7), திரோஷ் (5), மற்றும் ரத்தீஸ்-ன் மனைவி வீணா (30) ஆகிய 7 பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ரூபேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது படுகாயமடைந்த 6 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.