ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் : ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை


டிசம்பர் 27

ரசிகர்கள் ஆக்கப்பூர்வமாக சிந்திக்க வேண்டும் என்றும், அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதாகவும் ராகவேந்திர மண்டபத்தில் 2-வது நாளாக ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். 

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்று விவாதங்கள் நடந்து வந்த நிலையில், நேற்று (26-ந்தேதி) முதல் அவர் மீண்டும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். நேற்று, அவர் பேசுகையில் வரும் 31-ம் தேதி அன்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்க உள்ளதாக கூறினார். இந்நிலையில், இன்று இரண்டாவது நாளாக ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தனது வீட்டில் இருந்து புறப்பட்ட அவரிடம் அரசியல் குறித்தான கேள்வி எழுப்பியதற்கு, 31-ம் தேதி வரை பொறுத்திருங்கள் என்று பதிலளித்தார்.

ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்த பின்னர் ரசிகர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:- இரண்டாவது நாளாக உங்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவர்கள் குடும்பம்தான் முக்கியம். தாய், தந்தையர் வாழும் தெய்வங்கள். குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும், நமது சொத்து அவர்கள் தான். ரசிகர்கள் கட்டுப்பாடுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்தனை செய்கிறேன், உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இவ்வாறு கூறினார்.

நேற்று, தனது சினிமா வாழ்க்கை குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட ரஜினிகாந்த், இன்று தனது பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டார். திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,000 ரசிகர்கள் இன்று ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

Newsletter

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...