2ஜி புகழ் ஆ.ராசாவிற்கு கோவையில் உற்சாக வரவேற்பு

கோவை, டிசம்பர் 27

நாட்டில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி வழக்கில் இருந்து விடுதலையான பின்பு கோவை வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவிற்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.



2ஜி ஊழல் வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் திமுக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா இன்று கோவைக்கு வருகை தந்தார். கோவை விமான நிலையத்தில் ஆ.ராசாவிற்கு திமுக-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் அவரை வரவேற்கத் திரண்டனர்.



மூன்று நாட்கள் பயணமாக கோவை வந்துள்ள அவர், நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதனிடையே, ஆ. ராசாவை காண திடீரென ஏராளமானோர் திரண்டதால் விமான நிலைய பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...