'கருப்பு பணம் பற்றிய போதுமான அடிப்படை அறிவு மக்கள் மத்தியில் இல்லை'

கோவை, டிசம்பர் 21

'கருப்பு பணம் பற்றிய போதுமான அடிப்படை அறிவு மக்கள் மத்தியில் இல்லை. அதனால் தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்வியை பற்றி கூட அறியாமல், கருப்பு பணம் ஒழிந்துவிட்டதாக நம்புகிறார்கள் என்று மாற்று வளர்ச்சி மையத்தின் நிறுவனர், திரு. ஜெ. ஜெயரஞ்சன் வருத்தப்பட்டார். உலக மனிதாபிமானக் கழகம் சார்பில், 'பொருளாதார தி்ட்டங்களால் நாம் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா?' என்ற தலைப்பில், பொருளாதரக் கொள்கைகளின் தாக்கம் பற்றிய கருத்தரங்கம் , புதன்கிழமை மாலை நடைபெற்றது.



இந்த கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய ஜெயரஞ்சன் கூறியதாவது:

அரசியல்வாதிகள் பொதுமக்களை ஏமாற்றுவதற்காக தினமும் ஒரு பொய்யான புள்ளி விவரங்களை பட்டியலிட்டு அந்த தோல்வியை மறைக்கப் பார்க்கிறார்கள். இந்நிலையில், அரசு சேவைகள் அனைத்தும் தனியார்மயம் ஆக்கப்பட்டு வருகிறது. இதனால் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை சென்றடையும். முதலாளித்துவ கொள்கைகள் வெளிப்படையாகவே அனைத்து துறைகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் இயற்கை வளமும், மனித வளமும் உலகை கட்டுப்படுத்தும் பெரும் பணக்கார முதலாளிகளால் சுரண்டப்பட்டு வருகிறது. இவர்களுக்கு ஆதரவாக மத்திய மற்றும் மாநில அரசுகளும், உள்ளூர் முதலாளிகலும் செயல்படுகின்றனர்' என்று கூறினார்.



கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசிய எழுத்தாளர் பாமரன், 'கல்வியின் பெருமை அறிந்த மனிதன், மணலில் எழுதி பழகினான். பின், எழுத்துக்களை அச்சுக்களில் வடித்து வாசித்தான். ஊரில் வாசிக்கத் தெரிந்த ஒரு நபர் முச்சந்தியில் உள்ள விளக்கின் அடியில் அமர்ந்து, ஊர் மக்களுக்கு நாளிதழ்களை வாசித்துகாட்டுவார். இப்பொழுது நாம் நவீன முறைகளில் கல்வி கற்றுகொண்டிருக்கிறோம். இருந்தும், பொருளாதாரம் பற்றிய அறிவு நம்மிடம் மிகக் குறைவு. நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்குவகிக்கும் பொருளாதாரம் பற்றி அறிந்துகொள்ள இதுபோன்ற கருத்தரங்கம், தொடர்ந்து நடத்தப்படும்' என்று கூறினார்.



உலகமயமாக்கல் குறித்து உரையாற்றிய பொருளாதார வல்லுநர் செளந்தரன், 'உலகமயமாக்கலால் அதிகம் பயனடைந்தவர்கள் நடுத்தர மக்கள், ஆனால் பொருளாதாரம் மிகப்பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது' என எச்சரித்தார்.



மேலும் அவர் கூறியதாவது, 'அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள், சீனாவிற்கு அடுத்த நிலையில் இந்தியாவை தங்களது சந்தைக்கான நாடுகளாக பார்க்கிறது. எல்லா துறைகளிலும் வெளிநாடுகளின் முதலீடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மருத்துவம் மற்றும் உயர்கல்வி சேவைகளை தனியார் வசம் கொடுப்பதால், வெளிநாட்டினரின் ஆதிக்கம் அதிகரிக்கும், எனவே பொருளாதாரமும் பொதுமக்களும் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவின் நிதித் துறையை ஆகிரமிக்க தொடங்கியுள்ளனர். இதுபோன்ற பெரும் ஆபத்துகளை உணராமல் பொதுமக்கள் உள்ளனர், கப்பல் பாறையை முட்டும் போதுதான் ஆபத்து புரியும்' என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற பொருளாதார நிபுனர்களும், பொதுமக்களும், பொருளாதாரம் சார்ந்த தங்களின் சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...