ஆணவ படுகொலைக்கு எதிரான தூக்கு தண்டனை தீர்ப்பை மதிமுக வரவேற்கிறது என வைகோ பேட்டி

கோவை, டிசம்பர் 13

சங்கர் ஆணவ படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளதை மதிமுக வரவேற்கிறது என கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

திருப்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வைகோ, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

கொளத்தூர் நகைக் கடை திருட்டு வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்களைப் பிடிக்க ராஜஸ்தான் மாநிலம் சென்ற மதுரவாயில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி துப்பாக்கியால் சுட்டு கொள்ளப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. 

மதிமுக எப்போதும் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ளது. ஆனால், உடுமலை சங்கர் உள்ளிட்ட ஆணவ படுகொலைக்கு இந்த தீர்ப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. இதனை மதிமுக வரவேற்கிறது. இதேப்போன்று ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு அநீதியே அளிக்கப்பட்டுள்ளது. இவர்களது வழக்கில் பல குழப்பங்கள் நீடித்து வருகின்றன. தமிழக அரசு ஏற்கனவே முன்மொழிந்தது போல இவர்களை விடுவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக-வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...