ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் போட்டியிடத் தேர்தல் ஆணையம் எதிர்ப்பு

டிசம்பர் 12

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் ஒருவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு, தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தன் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில், ஒருவர், இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதிப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. 

அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டாலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு தொகுதியின் எம்பி அல்லது எம்எல்ஏவாக மட்டுமே இருக்க முடியும். அதனால், மற்றொரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அந்தத் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்துவதால், அரசுக்கு அதிக செலவாகிறது. அதனால், ஒருவர், ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் படி சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். அல்லது, ராஜினாமா செய்யும் தொகுதிக்கு இழப்பீட்டை வசூலிக்க வேண்டும்.

எம்எல்ஏ தொகுதிக்கு, ஐந்து லட்சம் ரூபாயும், எம்பி தொகுதிக்கு, ரூ.10 லட்சமும் வசூலிக்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளோம். மத்திய அரசுக்கு, 2004 மற்றும் 2016ல் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளோம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மத்தியஅரசு தான் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...