ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் போட்டியிடத் தேர்தல் ஆணையம் எதிர்ப்பு

டிசம்பர் 12

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் ஒருவரே இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதற்கு, தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தன் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளது.

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில், ஒருவர், இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதிப்பதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. 

அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஒருவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டாலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒரு தொகுதியின் எம்பி அல்லது எம்எல்ஏவாக மட்டுமே இருக்க முடியும். அதனால், மற்றொரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். அந்தத் தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்துவதால், அரசுக்கு அதிக செலவாகிறது. அதனால், ஒருவர், ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடும் படி சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். அல்லது, ராஜினாமா செய்யும் தொகுதிக்கு இழப்பீட்டை வசூலிக்க வேண்டும்.

எம்எல்ஏ தொகுதிக்கு, ஐந்து லட்சம் ரூபாயும், எம்பி தொகுதிக்கு, ரூ.10 லட்சமும் வசூலிக்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளோம். மத்திய அரசுக்கு, 2004 மற்றும் 2016ல் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளோம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மத்தியஅரசு தான் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...