கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

கோவை, டிசம்பர் 10 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மதியம் குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மதியம் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் வந்தார். 

ஞாயிற்றுகிழமை என்பதால் அரசு அலுவலகங்கள் விடுமுறை விடப்பட்டு ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடிகிடந்தது. 

இந்த நிலையில் அந்த நபர்  மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.  அங்கு இருந்த பத்திரிக்கையாளர்கள் அவரை மீட்டு பந்தய சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட அந்த நபரிடம் விசாரித்த போது தனது பெயர் செல்வகுமார் என்றும், காந்திபுரம் பகுதியில் சிலர் அவரிடம் இருந்த பணத்தை திருடிச் சென்றதாகவும், இது தொடர்பாக போலீசார் புகார் ஏற்க மறுத்ததால் தீக்குளிக்க முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார். 

தற்போது அவரை காவல் நிலையத்தில் வைத்துள்ள போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...