நாளை முதல் ஆவாரம்பாளையம் - கணபதி மார்க்கமான பாதை தற்காலிகமாக மூடல்

கோவை, டிசம்பர் 6

ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகளால் ஆவாரம்பாளையம் - கணபதி மார்க்கமான பாதை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனால், மாற்றுப் பாதையை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்குக் கோவை மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

கோவை மற்றும் அவினாசி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கியப் பாதையாக ஆவாரம்பாளையம் சாலை கருதப்படுகிறது. நாள்தோறும், ஆயிரக்கணக்கானோர் இந்தச் சாலையை பயன்படுத்துகின்றனர். கணபதி - ஆவாரம்பாளையம் இடையிலான சாலையில் ரயில்பாதையும் இருக்கிறது. ரயில் செல்லும் போது, ரயில்வே கேட் மூடப்படுவதால், பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்தே காணப்படும். 

இந்த நிலையில், ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், ஆவாரம்பாளையம் - கணபதி மார்க்கமான பாதை நாளை (டிச.,07) முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த பிறகே, பாதை மீண்டும் பயன்பாட்டிற்கு வரும் என்பதால், அதுவரை மாற்றுப் பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவை மாநகர காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...