கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்கக்கோரி ஆதித்தமிழர் கட்சியனர் ஆர்ப்பாட்டம்

கோவை, டிசம்பர் 6

கோவையில் அம்பேத்கர் சிலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.



சட்ட மேதை அம்பேத்கரின் சிலையை கோவையில்  அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 2009-ம் ஆண்டும் முதல் நிலுவையில் உள்ளது.

இதற்கு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியும் காவல்துறை அனுமதி வழங்காததாக கூறப்படுகிறது. 

இதனை கண்டித்து ஆதித் தமிழர் கட்சியினர் சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. 

இது தொடர்பாக அக்கட்சியை சேர்ந்த வெண்மணி செய்தியாளர்களிடம் கூறுகையில், 'அம்பேத்கர் சிலை அமைப்பது தொடர்பாக கோவை மாநகராட்சியிடம் அனுமதி பெற்றுள்ளோம். சிலை நிறுவ  மாவட்ட ஆட்சியரும் பரிந்துரை செய்துள்ளார்.  ஆனால், சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக தலைவர்கள் சிலை நிறுவப்படக்கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி சிலை அமைக்க காவல்துறை அனுமதி மறுத்து வருகிறத். இதனை கண்டித்து ஆண்டு தோறும் டிசம்பர் 6-ம் தேதி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அனுமதி வழங்கப்படும் வரையில் முற்றுகை போராட்டம் தொடரும்' என்றார். 

இந்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் திடீரென காவல் ஆணையர் அலுவலகத்திற்குள் நுழைய முயற்சித்தனர்.  அவர்களை தடுத்த போலீசார் சுமார் 10 நிமிடம் காவல் ஆணையர் அலுவலகத்தின் நுழைவு வாயிலை பூட்டினர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...