பேருந்து ஊழியர்களின் ஆக்கிரமிப்பில் தாய்ப்பால் ஊட்டும் அறை


கோவை, டிசம்பர் 05

மேட்டுப்பாளையம் ரோட்டில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்களுக்கான தாய்ப்பால் ஊட்டும் அறையை தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்களும், நடத்துநர்களும் ஓய்வறையாக பயன்படுத்தி வருகின்றனர்.



ஐ.எஸ்.ஐ தரச் சான்றிதழ் பெற்ற இந்த பேருந்து நிலையத்தில் வண்ணமீன் தொட்டிகள், நவீன இயந்திரக் கடிகாரம், இடை தூக்கி, சூரிய ஒளி மற்றும் காற்று மூலமாக மின் உற்பத்தி செய்யும் திட்டம் போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், அவை அனைத்தும் திறந்துவைத்த சில மாதங்களிலேயே பழுதாகி, யாருக்கும் உபயோகமில்லாமல் தற்போது தூசிப்படிந்து கிடக்கின்றன.

இந்நிலையில், பயணம் செய்யும் தாய்மார்களுக்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ள தாய்பால் ஊட்டும் அறையை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் பயன்படுத்திவருகின்றனர். அவர்களுக்கு, இடையூறு செய்யும் விதமாக பேருந்து ஓட்டுநர்களும் அவர்களின் உதவியாளர்களும் மதிய வேளையில் அறையின் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு, ஓய்வெடுப்பதால் அறையை நோக்கி வரும் தாய்மார்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.



‘ஆண் பேருந்து ஊழியர்கள் பலர், தாய்பால் ஊட்டும் அறைக் கதவின் அருகே அமர்ந்துள்ளதால், அறைக்குள் நுழையவே கூச்சமாக உள்ளது. அவர்கள் எழுப்பும் கூச்சலினால் குழந்தை அழத்தொடங்குகிறது. கண்ணாடி கதவுகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்பும் மிக குறைவே. இவர்களால், தாய்மார்களும், குழந்தைகளும் இந்த அறையை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது’ என்று வேதனையுடன் கூறினார் தினமும் கைக்குழந்தையோடு மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை வந்துசெல்லும் திருமதி. கோமதி.

இதுகுறித்து புகாரளித்த பேருந்து நிலைய பெண் ஊழியர் ஒருவர் கூறியதாவது, ‘இரவு நேரங்களில் தாய்பால் ஊட்டும் அறையை மதுக்கூடமாக சிலர் மாற்றுவதால், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த அறை திறந்துவைக்கப்பட்டுள்ளது. இருந்தும், பகலில் ஓட்டுநர்களும் நடத்துநர்களும் அறையின் அருகே அமர்ந்து தாய்மார்களை சிரமப்படுத்துகின்றனர். தாய்பால் அறைக்கு முன் ஒரு சிறிய தடுப்புக் கதவுகள் அமைக்கப்பட்டால் தான் இதற்கு தீர்வு’ என்று கூறினார்.

மேலும், தாய்ப்பால் அறையை விட்டு நகர்ந்து செல்லச் சொல்லும் பயணிகளையும், பேருந்து நிலைய ஊழியர்களையும் இவர்கள் மிரட்டுவதாகவும் புகாரளித்தார்.

தாய்மார்களை சிரமப்படுத்தும் ஆக்கிரமிப்பாளர்களை கடுமையாக தண்டித்து, தாய்ப்பால் ஊட்டும் அறையை பாதுகாப்பான இடமாக மாற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...