கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் குட்கா, பான்மசாலா பறிமுதல் : உணவு பாதுகாபுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை

கோவை, டிசம்பர் 5

பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் பான் மசாலாக்களை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலாக்களை தமிழகத்தில் விற்பனை செய்ய அரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில்,பெங்களூரில் செயல்படும் எஸ்.எம்.பி.கே. என்ற நிறுவனம் தனியார் பேருந்தின் மூலமாக கோவைக்கு பான்மசாலக்களை கடத்தி வருவதாக கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் B. விஜயலலிதாம்பிகை, மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் K. சந்திரன், S.R. ஜெரால்டு, M. வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய குழு நவ இந்தியா அருகே உள்ள வெளியூர் பேருந்துகள் நிறுத்தும் இடத்திற்குச் சென்றனர்.

இன்று அதிகாலை 3:30 மணியளவில் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் பெங்களூரில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான பான் மசாலாக்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பேருந்த் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.



இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்.B. விஜய லலிதாம்பிகை செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலாக்களை கோவைக்கு சிலர் கடத்தி வருகின்றனர். 

இந்த கடத்தல் குறித்த தகவல் அறிந்த உடன் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி, இன்று பெங்களூரில் இருந்து 15 மூட்டைகளில் கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்பிலான பான்மசாலக்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பேருந்தையும் பறிமுதல் செய்தனர். அதோடு, பேருந்தின் ஓட்டுனரான மோகன்குமார் (42) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



கோவையில் தடைசெய்யப்பட்ட இவ்வகை பான்மசாலாக்களை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 31 உணவு பாதுகாப்பு அலுவலகர்களும் கடைகளில் ஆய்வு நடத்தி விற்பனைக்காக வைக்கப்பட்ட பான் மசாலக்களை பறிமுதல் செய்து வருகின்றனர். 

இந்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். தடைசெய்யப்பட்ட பான்மசாலக்கள் விற்பனை மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான புகார்களை பொதுமக்கள் வாட்ஸ் ஆப் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதற்கான தொலைபேசி எண்கள் 960087386, 9444042322. 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...