எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தும் அதிமுக-வினர் மக்கள் நலனை தவறவிட்டுவிட்டனர்- சீமான்

கோவை, டிசம்பர் 3

புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி தனித் தீவு போலக் காட்சியளிப்பதாகவும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தும் அதிமுக-வினர் மக்கள் நலனை காக்க தவறவிட்டுள்ளனர் என்றும் சீமான் பேட்டியளித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

தற்போது ஏற்பட்ட புயலின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் தனித் தீவு போல் காட்சி அளிக்கிறது. அரசு சார்பில் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, மீட்புப் பணிகளும் மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறையற்ற அதிமுக-வினர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். 

கோவையில் ரகுபதி என்னும் இளைஞர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. பேனர் கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

ஆர்.கே.நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நிற்பதாக அமீர் கூறியது குறித்து நாளை முடிவு செய்வோம். மேலும், அன்புசெழியன் விஷயத்தில் அமீருக்கும்  எங்களுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் தேர்தலைப் போல் இந்தத் தேர்தலையும் நடிகர் விஷால் நினைக்கிறார், வரட்டும் பார்க்கலாம். திரைப்படத்துறை பாதுகாப்பு இல்லாத துறையாக இருக்கிறது. வட்டிக்கு பணம் பெற்றுத்தான் இந்தத் துறையில் வேலை பார்க்க வேண்டி இருக்கிறது. எனவே, அரசு இதனை கவனத்தில் கொண்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...