பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகளின் மறைவுக்கு திமுக எம்பி கனிமொழி அஞ்சலி

கோவை, டிசம்பர் 2

பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் வித்யாவின் மறைவையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 

திமுக சொத்துப் பாதுகாப்பு குழுத் துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் வித்யா உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு காலமானார். அவரது மறைவையொட்டி, இரு தினங்களுக்கு முன்பு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். 

இந்த நிலையில், கனிமொழி எம்பி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று கோவை வந்தார். பின்னர், ஜிவி ரெசிடென்சியில் உள்ள பொங்கலூர் பழனிச்சாமியின் இல்லத்திற்கு சென்ற அவர், அங்கு மறைந்த டாக்டர். வித்யாவின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, பொங்கலூர் பழனிச்சாமி, வித்யாவின் கணவரும், மருத்துவ அணி துணை அமைப்பாளருமான டாக்டர் கோகுல், மாநில இளைஞரணி துணை செயலாளர் பைந்தமிழ்பாரி ஆகியோரிடத்தில் ஆறுதல் கூறினார். 

இந்த நிகழ்வின்போது, மாநகர வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ, மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...