நிவாரணப் பணிகளுக்காக குமரி மாவட்டத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

டிசம்பர் 02

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் ஆயிரம் மின்கம்பங்களும், 100-க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர்களும் சேதமடைந்தது தெரியவந்தது. இதன் காரணமாக 1,500 மீட்டர் உயர் மின் அழுத்தப் பாதையும், 2,400 மீட்டர் குறைந்த மின் அழுத்தப் பாதையும் சேதம் அடைந்துள்ளது. மின்கம்பங்களை மாற்றி, மின்பாதையை சீரமைக்க வெளி மாவட்டங்களில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். நேற்று முதல் அவர்கள் நாகர்கோவில் மற்றும் மாவட்டத்தின் பிற நகரங்களில் மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இன்று 4-வது நாள் ஆன பின்பும் மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் மின் விநியோகம் முழுமையாக சீரடையவில்லை. இதனால், 29-ந்தேதி இருளில் மூழ்கிய குமரி மாவட்டம் இன்று 4-வது நாளாக இருட்டில் தவிக்கிறது. குமரி மாவட்டத்தில் புயல் நிவாரண பணிகளை முடுக்கி விட மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் முகாமிட்டு உள்ளனர். 

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அந்தத் தொகையின் மூலம் குமரி மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...