”எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை விட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய அமைச்சர்கள் தீவிரம் காட்ட வேண்டும்”

கோவை, டிசம்பர் 02

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதை விட, மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அமைச்சர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதை விட அமைச்சர்கள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று நேரில் ஆய்வு செய்ய வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது போலவே பிற கடலோர மாவட்டங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அப்பகுதிகளில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் எனத் தெரியவில்லை. 

கடலூரில் இளைஞர் ஆனந்தன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாகத் தவறான தகவல்களை பாமக நிறுவனர் ராமதாஸ் பரப்பி வருகிறார். அவர் மீது பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பேனர் வைப்பது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு நடைமுறைக்கு ஒவ்வாதது.  குடும்ப விழாக்களுக்குப் பேனர் வைக்கலாமா, கூடாதா என்பதை விளக்க வேண்டும். 

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்துகொண்டால் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் நிச்சயம் வெற்றி பெறுவார். பணப்பட்டுவாடாவைத் தவிர்க்கக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். திமுக வேட்பாளரை ஆதரிப்பது என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. கோவையில் இளைஞர் ரகு உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. தமிழக அரசு சார்பில் ரூ. 1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். அதிமுக சார்பில் அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...