எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கோவை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்


கோவை, டிசம்பர் 2

கோவை வ.ஊ.சி. மைதானத்தில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அ இ அ.தி.மு.க சார்பில் நடைபெற உள்ள இவ்விழாவில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளனர். 

இந்த நிலையில், விழாவையொட்டி கோவை புற நகர பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட போலீசார் வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

1) கேரளா மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் வேலந்தாவலம், மலுமிச்சம்பட்டி மற்றும் செட்டிபாளையம் வழியாக பல்லடத்தை அடையவும்.

2) பொள்ளாச்சியில் இருந்து சேலம் செல்லும் வாகனங்கள் நெகமம் வழியாக பல்லடத்தை அடையவும்.

3) மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் அன்னூர் வழியாகச் செல்லவும்.

4)அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை மற்றும் பொள்ளாச்சி சாலை என மாநகர பகுதிகளுக்குள் செல்லும் சாலையில் செல்ல வேண்டிய வாகனங்கள் எல்&டி பைபாஸ் சாலையை பயன்படுத்தவும். 

இந்த போக்குவரத்து மாற்றம் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை அமலில் இருக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...