கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளின் வீடுகளுக்குச் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

கோவை, நவம்பர் 30

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் வித்யாவின் மறைவையடுத்து, கோவையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். 

கோவை வந்த அவர், ஜி.வி.ரெசிடென்சியில் உள்ள திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமியின் வீட்டிற்குச் சென்று, அண்மையில் காலமான வித்யாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், பொங்கலூர் பழனிச்சாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பைந்தமிழ்பாரி, வித்யாவின் கணவர் டாக்டர். கோகுல் ஆகியோரிடத்தில் துக்கம் விசாரித்தார். 



இதைத்தொடர்ந்து, கோவை திருச்சி சாலை ருக்மணி நகர்ப் பகுதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.மோகன் மற்றும் ராஜவீதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.இராமநாதன், ராம் நகரில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.ரா.சுப்பையன் ஆகியோர் இல்லங்களுக்குச் சென்று நலம் விசாரித்தார். 



முன்னதாக, கோவைத் தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால், அனுமதிக்கப்பட்டிருந்த மாநகர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கார்த்திக் செல்வராஜின் மகன் கார்த்திக்கை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின்போது, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்முடி, இராமச்சந்திரன், திமுக மாநில இளைஞரணி செயலாளர் வெள்ளகோவில் சாமிநாதன், மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் சி.ஆர்.இராமசந்திரன், தமிழ்மணி, முபாரக், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...