ரகுபதி மரணத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - கோவையில் மு.க.ஸ்டாலின் பேட்டி


கோவை, நவம்பர் 30

அ.தி.மு.க.வினர் அமைத்த அலங்கார நுழைவு வாயிலில் மோதி ரகுபதி என்ற உயிரிழந்த சம்பவத்தில் தமிழ அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



பின்னர், சின்னியம்பாலயத்தில் உள்ள ரகுபதியின் வீட்டிற்குச் சென்ற அவர், ரகுபதியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- 



ரகுபதி என்ற இளைஞர் மணக்கோலத்தில் இருக்க வேண்டியவர். அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடையிருந்தும் காந்திபுரம் மேம்பாலம் திறக்கப்பட்ட போது ஆளும் கட்சி சார்பில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பெயரிட்ட பட்ட பலூன் பறக்க விடப்பட்டதை அனைவரும் அறிவோம்.



நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளும் கட்சி எல்லை மீறி செயல்பட்டு வருகிறது. நான் செயல்தலைவரான போதிலே, பொது மக்களுக்கு இடையூராக இருப்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தினேன். அது தி.மு.க.வினரால் கடைபிடிக்கப்படுகிறது.

ரகுபதி லாரியிலிருந்து தப்பிக்க ஓரம் கட்டியபோது வளைவில் மோதி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ. நா.கார்த்திக் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பு உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.

கோவையில் ஆயிரக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். தமிழக அரசு ரகுபதி-யின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் பொங்கலூர் பழனிச்சமியின் சகோதரர் மகளான வித்யா உயிரிழப்புக்கு அஞ்சலி செலுத்த அவர் இன்று கோவை வந்தார். 

ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள வித்யா-வின் வீட்டிற்கு சென்ற ஸ்டாலின், வித்யாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். 

இதைத் தொடர்ந்து, கட்சியின் மூத்த உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களை நலம் விசாரித்தார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...