ஜெயலலிதா கைரேகை வழக்கு: பெங்களூர் சிறை கண்காணிப்பாளர் ஆஜராகச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


கோவை, நவம்பர் 24

தேர்தல் ஆணையப் படிவங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கைரேகை வைத்தது தொடர்பான வழக்கில் பெங்களூர் சிறை கண்காணிப்பாளர், ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் போட்டியிட்ட சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

சரவணன் தாக்கல் செய்திருந்த மனுவில், ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அதிமுக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னம் ஒதுக்கக்கோரி இடதுகை பெருவிரல் ரேகையைத் தேர்தல் ஆவணப் படிவத்தில் வைத்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவோடு தான் இதில் கைரேகை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே மருத்துவ ஆவணங்களைச் சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார். 

இது குறித்து விளக்கமளிக்கத் தேர்தல் ஆணைய அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் கடந்த மாதம் 13-ம் தேதி மத்திய தேர்தல் ஆணைய முதன்மைச் செயலர் வில்போர்டு ஆஜராகி விளக்கம் அளித்தார். 

அப்போது, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஒப்புதல் அளித்திருந்ததால் அதன் பெயரிலேயே விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து, ஜெயலலிதா கைரேகை வைத்ததாகச் சான்றளித்த மருத்துவர் பாலாஜி ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

அதன்படி, மருத்துவர் பாலாஜி கடந்த மாதம் 27-ம் தேதி ஆஜரானார். அப்போது, அவரிடம் கைரேகை தொடர்பாக மனுதாரரின் வழக்கறிஞர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மருத்துவர், இரண்டாவது முறையாகக் கடந்த 3-ம் தேதி ஆஜராகி விளக்கமளித்தார். இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்தில், மேற்கண்ட வழக்கைத் தாக்கல் செய்த சரவணன் ஆஜராகி சில கேள்விகளை முன்வைத்தார். 

இந்நிலையில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட கைரேகை உள்ளிட்ட ஆவணங்களுடன் சிறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...