கோயம்புத்தூர் விழாவின் பத்தாவது பதிப்பு அறிமுகம்

கோவை, நவம்பர் 24

கோயம்புத்தூர் தினமான இன்று ‘கோயம்புத்தூர் விழா - பத்தாவது பதிப்பின்’ தொடக்க நிகழ்ச்சி, டவுன் ஹாலில் உள்ள விக்டோரியா நகர்மன்ற வளாகத்தில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் விழாவின் பத்தாவது பதிப்பை, ஜனவரி 5 முதல் 12 ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும். இவ்விழாவின் சிறப்பு அம்சங்களாக இரண்டடுக்கு பேருந்து, உணவு திருவிழா, ஓவிய கண்காட்சி மற்றும் இசை நிகழ்ச்சி ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், தொடக்க நிகழ்ச்சியில் ‘யங் இன்டியன்ஸ்’ அமைப்பினர் தெரிவித்தனர்.



கடந்த 9 ஆண்டுகளாக கோவை மக்களால் கொண்டாடப்படும் ‘கோயம்புத்தூர் விழா’ நிகழ்ச்சியை, இந்திய தொழிற்கூட்டமைப்பின் ஓர் அங்கமான, ‘யங் இன்டியன்ஸ்’ அமைப்பின் கோவை கிளை நடத்திவருகின்றது. இவ்விழாவில் கோவை மக்களின் பண்பாடு, கலை, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்கு, உணவு, திறமை மற்றும் சமூக உணர்வுகள் போன்றவை வண்ணமயமாக அடையாளப்படுத்தப்பட்டு கொண்டாடப்படுகின்றது.

இவ்விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய ‘யங் இன்டியான்ஸ்’ அமைப்பின் தலைவர் திரு. பிரசன்னா கிருஷ்ணன் கூறியதாவது, ‘கோயம்புத்தூர் விழாவின் பத்தாவது பத்திப்பில் சென்ற ஆண்டை விட அதிக எண்ணிக்கையில் கோவை மக்கள் பங்கேற்ப்பார்கள். இரண்டடுக்கு பேருந்தில் பயணம் செய்து கோவையின் பழமையான பகுதிகளை சுற்றிப்பார்க்கலாம், நகரின் முக்கிய வீதிகள் திருவிழா தோரணங்களால் அலங்கரிக்கப்படும்,வ உ சி  மைதானத்தில் நடைபெறும் உணவு திருவிழா, திரைப்பட விழா மற்றும் இசை நிகழ்ச்சியில் பொதுமக்கள் பங்கேற்கலாம். அதுமட்டுமின்றி, கோவை மக்கள் தங்களின் திறமைகளை உலகிற்கு எடுத்துக்காட்ட இவ்விழாவில் மேடை அமைத்துத் தரப்படும்’ என்று கூறினார்.

மேலும், ‘இவ்விழா கோவை மக்களுக்காக, மக்களே கொண்டாடும் திருவிழாவாக அமைய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, கோவையின் பெருமைகளை எடுத்துக்கூறும் ‘கோவைப் பாடல்’ மற்றும் கோயம்புத்தூர் விழாவின் செயலி ஆகியவை வெளியிடப்பட்டன.



இந்நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி ஆணையர் டாக்டர் திரு. K. விஜய கார்த்திகேயன், போக்குவரத்து துணை ஆணையர் திரு. சுஜித் குமார் மற்றும் இந்திய தொழிற்கூட்டமைப்பு, கொடிசியா, யங் இன்டியன்ஸ் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...