நண்பனை கொலை செய்த கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை

நவம்பர் 23

நண்பனைக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

நாமக்கல் மாவட்டம் திருச்சேங்கோடு, மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு இ.சி.இ பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் கல்லூரிப் படிப்பிற்காக, காளப்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அவருடன் நீலகிரி மாவட்டம் எல்லநள்ளிப் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் பிரதீப் ஆகியோர் தங்கியிருந்தனர். 

இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஜுலை மாதம் 27-ம் தேதி அறையைச் சுத்தம் செய்வதில் சந்தோஷ், தினேஷ் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால், சந்தோஷ் கத்தியால் குத்தியதில் தினேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதைக் கண்ட பிரதீப் தினேஷை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக பிரதீப் அளித்த புகாரின் பேரில், சந்தோஷ் போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இது தொடர்பான வழக்கு கோவை வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில்,  நீதிபதி குணசேகரன், குற்றவாளி சந்தோஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...