இரட்டை இலைச் சின்னம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கீடு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நவம்பர் 23

பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு, இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணியிருக்கு தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார்.அதில் ஒரு அணி வாக்காளர்களுக்கு நிறைய பணம் கொடுக்க முயற்சிப்பதாகவும் புகார்கள் வந்தததை தொடர்ந்து தேர்தல் ஆணையம் 

, இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.

இது தொடர்பாக இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதேபோல, தேர்தல் ஆணையத்திலும் லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட பிரமாணபத்திரங்களை தாக்கல் செய்தனர். இரு தரப்பினரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுத்துப்பூர்வமாக முன்வைத்துள்ள நிலையில், சின்னமும், கட்சியும் தங்களுக்குத்தான் கிடைக்கும் என இரு தரப்பினரும் நம்பிக்கையுடன் கூறிவந்தனர். 

பல மாதங்களாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று இறுதி தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, இரட்டை இலை சின்னத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அணியிருக்கு தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், இரட்டை இலைச் சின்னம் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணியினருக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்ளத் தடை இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தேர்தல் ஆணையம் அறிவிப்பு பற்றிய தகவல் காரணமாக எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் அவர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இரட்டை இலை சின்னம் எங்களுக்கு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் பக்கம் நியாயம் உள்ளது. அதனால் தான் தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கி உள்ளது. இன்று மகிழ்ச்சியான செய்தியை தேர்தல் ஆணையம் எங்களுக்கு தெரிவித்துள்ளது. 90 சதவீதம் நிர்வாகிகள் எங்கள் பக்கம் உள்ளனர். நாங்கள் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி, தேர்தல் ஆணையம் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. என்றார். 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...