நித்தியானந்தா- ரஞ்சிதா வீடியோ உண்மை என தில்லி தடயவியல் ஆய்வகம் உறுதி

நவம்பர் 23

திரைப்பட நடிகை ரஞ்சிதா உடன் சர்ச்சைக்குரிய நித்தியானந்தா உல்லாசமாக இருப்பது போல் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான வீடியோ உண்மையானது என தில்லி தடயவியல் ஆய்வில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு பிடதியில் உள்ள ஆசிரமத்தில் திரைப்பட நடிகையான ரஞ்சிதா சாமியார் நித்தியானந்தா உடன் உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் அவரது கார் டிரைவர் லெனின் கருப்பன் மூலம் தொலைக்காட்சிகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து, நித்தியானந்தா தலைமறைவானார்.

அவருக்குச் சொந்தமான பெங்களூரு, தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆசிரமங்கள் முன் மக்கள் போராட்டம் நடத்தி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.



இதற்கிடையில், திருவண்ணாமலை அருகே நித்தியானந்தாவை கர்நாடக போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, தனக்கு ஆண்மையே இல்லை. வீடியோவில் இருப்பது தான் இல்லை. அந்த வீடியோ போலியாக சித்தரிக்கப்பட்டது என நித்தியானந்தா வாதாடினார். பின், ஆண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீடியோ காட்சிகள் அடங்கிய சிடி-யை தில்லியிலுள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பின் சிஐடி-க்கு தடயவியல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், வீடியோவில் இருப்பது நித்தியானந்தா தான் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...