கடன் வாங்கியவரை வீட்டினுள் வைத்து பூட்டிய கந்துவட்டிக்காரர்

கோவை, நவம்பர் 22

கோவையில் கடன் வாங்கியவரை, வீட்டினுள் வைத்து கந்துவட்டிக்காரர் பூட்டி விட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை ஒண்டிப்புதூர் அருகிலுள்ள கம்பன் நகரில் மோகன் - வாணி தம்பதியினர், கடந்த 11 வருடங்களாக சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு, சோமனூர் பகுதியை சேர்ந்த ஆறுச்சாமி என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளனர். இதனிடையே, இன்று இவர்களது வீட்டுக்கு வந்த ஆறுச்சாமி, வீட்டிற்குள் உரிமையாளர் மோகனை வைத்து பூட்டி விட்டு சாவியை எடுத்துச் சென்றுள்ளார். இதனால், அவரது மனைவி மற்றும் பள்ளிக்கு சென்று திரும்பிய மகள் தெருவில் நிற்க நேர்ந்தது. 



இது குறித்து தகவலறிந்து வந்த சிங்காநல்லூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று ஆறுச்சாமியை அழைத்து வந்து வீட்டை திறந்து விட்டனர். வாங்கிய கடனை விட அதிக மதிப்புள்ள வீட்டை அபகரிக்க முயல்வதாக மோகன் குற்றம்சாட்டினார். அப்போது, வீட்டை கடந்தாண்டு மோகன் பத்திரப்பதிவு செய்து வைத்தாகக் கூறி, அதற்கான பத்திரங்களை ஆறுச்சாமி போலீசாரிடம் காண்பித்தார். வீட்டை தனக்கு விற்றுவிட்டு காலி செய்யாமலும், பணத்தை திரும்பத் தராமலும் அலைகழித்த ஆத்திரத்தில் வீட்டை பூட்டிச் சென்றதாகவும் கூறினார். 

சொத்துக்கள் குறித்த பிரச்சனை என்றால் நீதிமன்றத்தில் இருவரும் தீர்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய காவல்துறையினர், ஆறுச்சாமி வீட்டிற்குள் வைத்து கதவை மூடிச்சென்றது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...