இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு சார்பில் கோவையில் வரும் 27-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கோவை, நவம்பர் 22

பிரதம மந்திரி கவுசல் விகாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் 43 நாட்கள் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய தொழில்முனைவோர் மற்றும் மேம்பாட்டுத்துறையின் (எம்.எஸ்.டி.இ) சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுச் செயல்பட்டு வரும் இந்தப் பயிற்சி வகுப்பிற்குக் குறைந்தபட்சம் 5-வது படித்திருந்தால் போதுமானது. தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி, இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.

நாட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளித் தொழில் சங்கங்களில் இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு முக்கியமானதாகும். இந்த அமைப்பானது, ஜவுளித்துறையில் பல்வேறு விதமான தொழில் போட்டிகளை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள சித்ரா பகுதியில் வரும் 27-ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. பிரதம மந்திரி கவுசல் விகாஷ் யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு உறுப்பினர்களின் நிறுவனங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக ஜவுளித் தொழில்துறையில் ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனைப் போக்கும் நடவடிக்கையாக, இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பு மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்துக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, முன் அனுபவமில்லாத 50,000 பேருக்கு, இந்திய ஜவுளி உரிமையாளர்களின் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தின்கீழ் 16,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...