கிராமங்கள் வழியாக செல்லும் வாகனங்களால் மக்கள் அவதி


கோவை, நவம்பர் 22

கோவை கணியூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி கட்டணத்தை தவிர்க்க கிராமங்கள் வழியாக செல்லும் சிறிய மற்றும் கனரக வாகனங்களால் அப்பகுதி மக்கள் அவதி, நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை.

கோவையிலிருந்து சேலம் வழியாக கார்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் பாலக்காடு வழியாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் செல்ல முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக NH 47 திகழ்கிறது. மத்திய அரசாங்கத்தின் தங்க நாற்கரச் சாலை திட்டத்தின் கிழ் பத்து ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டு கடந்த ஈராண்டுக்கு முன் இச்சாலை 6 வழி சாலையாக மாற்றப்பட்டது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூரில் சுங்கச்சாவடி கட்டண மையம் அமைக்கப்பட்டது. சுங்கச்சாவடிக்கு அருகே உள்ள கிராமங்களில் வசித்து வருவோர் அடையாள சான்றிதழ் காட்டி சலுகை கட்டணத்தில் பயணிக்கலாம்.

சுங்கச்சாவடி கட்டணத்தை தவிர்க்க வாகனங்கள்   கணியூர் அருகே வரும் போது அருகில் உள்ள கிராமங்களான தென்னம்பாளையம், சோமனூர், சின்னியம்பாளையம், மோரிப்பாளையம், முதலிபாளையம் வழியாக செல்கின்றன. கிராம சாலைகள் மிகவும் குறுகலாகவும், நெடுஞ்சாலைகளை விட தரம் குறைந்ததாகவும் உள்ள காரணத்தினால் சேதம் அடைக்கின்றன. கனரக வாகனங்கள் வேகமாக செல்வதால் சாலை வழியாக  தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களும், சாலையில் இருசக்கர வாகனத்தின் பயணிப்போர் விபத்துகளில் சிக்குவதும் அதிக அளவில் ஏற்படுகின்றன என கிராம வாசிகள் புகார்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சின்னியம்பாளையம் பகுதியில் வசித்து வரும் பா. பூபாலன் கூறுகையில் “ சுங்கச்சாவடி கட்டணம் காரணமாக வாகனங்கள் கிராமங்கள் வழியாக செல்வதால் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. கிராமபுறச் சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லாமல் தடுக்க தடுப்புகள் வைக்கப்படுகிறது ஆனாலும் அதனை மீறி வாகனங்கள் உள்ளே வந்து செல்கின்றன” என்றார்.

காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் அப்பகுதிகளில் செல்வதால் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்வோர், கூலி வேலைக்கு செல்வோர் என அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர்

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்” கனரக வாகனங்கள் கிராமப்புற சாலை வழியாக செல்வதை மட்டுமே தடுக்க முடியும். சிறிய ரக வாகனங்கள் செல்வதை தடுக்க இயலாது. எனினும் போக்குவரத்துக்கு இடையுறு ஏற்பட்டால் அதற்கு மாற்று ஏற்பாடாக தேசிய நெடுஞ்சாலை வழியாக தான் வாகனங்கள் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.” என்றார்.

நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணத்தை முறைப்படுத்தி வாகனங்களின் கட்டணத்தை குறைத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைக்களுக்கு தீர்வு ஏற்படும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.    

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...