பள்ளிக் குழந்தைகளின் திறன் மேம்பாடு குறித்த சிறப்புப் பயிற்சி முகாம்

கோவை, நவம்பர் 22

ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 



கோவையில் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட 41 மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் 8 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 9,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது, வெற்றிக்கான நடவடிக்கைகள், இலக்குகளை நிர்ணயம் செய்வது, நேரத்தை கடைபிடிப்பது, தூய்மையாக இருப்பது, பொழுதுபோக்குவது உள்ளிட்ட 20 திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 



ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 152 ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இறுதியில் மாணவர்கள் தங்களை சுயமதிப்பூடு செய்வதற்காக சிறுகையேடு வழங்கப்பட்டது. பயனுள்ள இந்த பயிற்சி முகாமிற்கு பள்ளிகள் தரப்பில் இருந்து பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...