விமான டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் எண் கட்டாயமாகிறது

கோவை, நவம்பர் 22:

உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோர் தங்களின் விமான டிக்கெட் முன்பதிவின் போது ஆதார் எண்ணை விமான டிக்கெட்டுடன் இணைத்திருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் 2018-ம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.

இது தொடர்பாக விமானநிலைய கட்டுப்பாட்டு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 2018-ம் ஆண்டு முதல் கொல்கத்தா, அகமதாபாத், விஜயவாடா தவிர மற்ற விமான நிலையங்களில் இருந்து உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வோர், தங்களின் ஆதார் எண்ணை விமான டிக்கெட்டுடன் இணைக்க வேண்டும்.

ஆதார் அடிப்படை திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ள இந்த புதிய திட்டத்தால், பயணிகள் விமான நிலைய முனையத்திற்குள் நுழையும் போது அவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய பயோமெட்ரிக் முறை சோதிக்கப்படும். இதன் மூலம் அந்த குறிப்பிட்ட நபர் எந்த விமானத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார், எங்கு செல்கிறார் என்ற விபரங்களை பெற முடியும். பரிசோதனையின் போதே அவரைப் பற்றிய முழு விபரங்களும் தெரிந்து விடும்.

இதனால் பயணிகள் அடையாள அட்டைகள், பேப்பர் டிக்கெட்கள், போர்டிங் கார்டு ஆகியவற்றை காட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதன்மூலம், பயணிகளின் நேரம் சேமிக்கப்படுகிறது. ஆதார் எண் இணைக்கப்பட்டிருப்பதற்கான பார் கோடு டிக்கெட்டிலேயே அச்சிடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...