உதவித் தொகைக் கோரி எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள் கைக்குழந்தையுடன் மனு


கோவை, நவம்பர் 20: அரசின் உதவித்தொகையை வழங்கக்கோரி எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ குபேந்திரன். எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட இவர், கோபியைச் சேர்ந்த அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது 45 நாட்களே ஆன கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய அரசின் உதவித் தொகையை வழங்கக் கோரி கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். 

கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பால்வினை நோய்க்கு மருந்துகள் எடுத்து வருவதாக கூறிய அவர்கள், அரசு வழங்கும் உதவித்தொகைக் கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பலமுறை மனு அளித்தும் எவ்வித உதவித்தொகையும் கிடைக்கவில்லை என தெரிவித்தனர். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ வேண்டும் என்ற நம்பிக்கை தரும் அரசு, அதற்கான உதவி தொகையை அளிக்காமல் இழுத்தடிப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர். 

மேலும், தமிழக அரசால் வழங்கப்படும் பிரசவகால உதவித் தொகையும் இதுவரை வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டிய தம்பதியினர், அரசு தங்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு விரைவாக உதவித் தொகைக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...