கோவை என்னை வளர்த்த ஊர் - புதிய காவல் ஆணையர் நெகிழ்ச்சி பேட்டி

கோவை, நவம்பர் 18: கோவை மாநகரின் 27-வது காவல் ஆணையராக K.பெரியய்யா பதவியேற்றுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த K.பெரிய்யா கடந்த 1982-ம் ஆண்டு தொடங்கி 1988-ம் ஆண்டு வரை கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பயின்றார். 

அப்போது, கல்லூரியின் ஹாக்கி அணியின் கேப்டனாக பதவி வகித்தார். அதோடு, கோவை மாவட்ட கால்பந்து அணியிலும் விளையாடியுள்ளார்.

தொடர்ந்து, கடந்த 1989-ம் ஆண்டு காவல் துறையில் டி.எஸ்.பி. ஆக பணிக்குச் சேர்ந்த அவர் 1997-ல் ஐ.பி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்றார். 

இதனை தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய அவர், சென்னை பெருநகர கூடுதல் ஆணையராக (போக்குவரத்து) பணி புரிந்து வந்தார்.

அவர் இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையராக பதவியேற்றுக்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'நான் கோவையை நன்கு அறிந்தவன். கல்லூரிப் படிப்பை இங்கு தான் முடித்துள்ளேன். கோவை என்னை வளர்த்தெடுத்த ஊர். இந்த ஊரின் அமைதிக்கு பல்வேறு திட்டங்களை வகுப்பேன்.



மாநகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்ற சம்பவங்களை குறைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதோடு, பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, மாநகராட்சி மற்றும் அரசுத் துறைகளுடன் இணைந்து திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

காவல்துறையின் நற்செயல்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

Newsletter

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...