ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்துடன் பிஎஸ்ஜி கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, நவம்பர் 16

கோவையில் உள்ள பிஎஸ்ஜி கல்வி நிறுவனம் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த கிளஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. 

இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் முன்னணிக் கல்வி நிறுவனமாக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகம் திகழ்ந்து வருகிறது. இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கான பயிற்சி மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு என பலதுறைகளில் இந்தப் பல்கலைக்கழகம் தீவிரம் காட்டி வருகிறது. லண்டன், ஓமன், வங்கதேசம் மற்றும் நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் இதன் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் பிஎஸ்ஜி கல்விக்குழுமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிளஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகத்தில் 2 வார கால பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். 

இதன் ஒருபகுதியாக, கிளஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகமானது, கோவையில் இயங்கி வரும் பிஎஸ்ஜி கல்வி நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம். அதன்படி, மாணவர்களுக்கு கல்வி பயிலும் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பது, இரு கல்வி நிறுவனங்களுக்கு இடையே ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து கொள்வது,  ஜவுளி, ஃபேஷன், உயிரியல் மற்றும் சுகாதாரம் உள்ளிட்டவைகளில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு தரப்பினரிடையே சர்வதேச அளவில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டுத் திட்டங்களை செயல்படுத்துகிறது. இரு கல்வி நிறுவனங்களிடையிலான ஒப்பந்தத்தில் கிளஸ்கோ கலிடோனியன் பல்கலைக்கழகத்தின் துணை முதல்வரும், பிஎஸ்ஜி கல்லூரியை பார்வையிட வந்த 4 பேர் கொண்டக் குழுவின் தலைவருமான ஜீனைன் கிரிகெர்சன் - ஹெர்மன்ஸும், பிஎஸ்ஜி சார்பில் அதன் இயக்குநர் பி. ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டனர். 

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...